கல்குவாரி விபத்து – வி.கே.சசிகலா ட்வீட்..!

பெரம்பலூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 

பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவரும் பலியாகி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் கல்குவாரிகளை கண்டறிந்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை கல்குவாரிகள் செய்கின்றனவா? என்பதை தமிழக அரசு முறையாக கண்காணிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, வினோத் ஆகியோரின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment