கிளி ஜோசியரின் கொலை வழக்கில் கொலையாளி பரபரப்பு வாக்கு மூலம்

வழிபோக்கு ஜோதிடத்தை நம்பி, கிளி ஜோசியரை கொலை செய்ததாக அக்கவுண்டன்ட் ரகு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருப்பூர், குமரன் சாலையில் உள்ள புங்கா அருகே டிசம்பர் 24ம் தேதி கிளி ஜோதிடர் ரமேஷ் ஹெல்மெட் அணிந்த நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்த நிலையில், டிசம்பர் 26ம் தேதி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் அக்கவுண்டன்ட் ரகு சரணடைந்தார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரகுவை, ஜனவரி 3ம் தேதி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, ஜோதிடர் ரமேஷ் ஒரு பெண்ணை வசியம் செய்து தருவதாக கூறி ஏமாற்றியதாக, வழிப்போக்கு ஜோதிடர் மூலம் அறிந்ததால், கிளி ஜோதிடர் ரமேஷ்சை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment