சேலத்தில் பரபரப்பு… நடு ரோட்டில் பின்பக்க டயர்கள் கழன்று ஓட்டம்.! அலறிய பயணிகள்…!

சேலம் அருகே கோவை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் இருசக்கர வாகனத்தின் பின் டயர்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா

பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் டயர் கழன்ற உடன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியத்தால், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தின் முன்சக்கரம் பஞ்சரான காரணத்தால், அதன் பின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது.

இதனையடுத்து பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயணிகளை பாதுகாப்பாக மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.