முதல்வரிடம் புகார் அளித்த தொழிலதிபர்..! 10 நாட்களுக்குள் அதிரடி ஆக்ஷன் எடுத்த முதல்வர்..!

வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் கடந்த 19-ஆம் தேதி முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறித்தும் சொன்னீர்கள். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டமும் முதல் முறையாக இந்தக் கோவையில் தான் நாம் தொடங்கியிருக்கிறோம்.

ஏதோ பேசியிட்டு, இத்துடன் இந்தப் பிரச்சனை முடிந்துவிடும் என்று நாங்கள் இருக்க மாட்டோம். உங்களை அடிக்கடி இதுபோன்ற கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தி சந்திக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் தொடர்ந்து பெறுவோம். அந்தப் பணியை நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவர்களும், சிறு. குறு தொழில் துறையை கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் அன்பரசன் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

தேவைப்படுகிறபோது நானும் வருவேன், அவசியம் வருவேன், அதில் எத்த மாற்றமும் கிடையாது. அதையே தொடர்ந்து சொல்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தத் துறையினுடைய அதிகாரிகளிடத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் எப்போது வேண்டுமானாலும் எங்களைச் சந்திக்க நீங்கள் வரலாம் அதை எந்த நிலையிலும் நாங்கள் நிச்சயமாக மாறுபட மாட்டோம்.

எனவே, நீங்கள் எடுத்துச் சொன்ள அனைத்து கருத்துக்களையும் படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொல்லி அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறோம். எனவே, மீண்டும் சந்திப்போம்,
இங்கே பேசிய ஒரு நண்பர், பத்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கணக்குகளையெல்லாம் வணிகவரித் துறை கேட்பதாக கட்டிக் காட்டியிருக்கிறார். இதுகுறித்து வணிகவரித் துறை அமைச்சரிடமும் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வரிடம் தொழிலதிபர்கள் புகாரளித்த 10 நாட்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment