#breaking: 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளள் பங்கேற்றுள்ளனர்.

அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுபோன்று வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்