Breaking: 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது .!

  • உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
  • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி அடுத்த மறுநாள் மாலை வரை நடைபெற்றது.

அப்போது சில வாக்கு சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 12 மாவட்டங்களில் இருந்த  25 இடங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நிறுத்தப்பட்ட 25 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. நாமக்கல்,  கடலூர், திண்டுக்கல், குமரி, அரியலூர், மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

author avatar
murugan