#BREAKING: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் – அதிமுக வெற்றி

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.

அடிதடி, ரகளைகளுக்கிடையே கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றார். இதுபோன்று வெள்ளலூர் பேரூராட்சியின் துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டார். ரகளை, மோதல், போலீஸ் தடியடிக்கு இடையே கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது, திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தி பிரச்சனை செய்தவர்களை விரட்டியடித்தனர்.

இதுதொடர்பான செய்தியை தெரிந்துக்கொள்ள “வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல் – கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு” என்பதை க்ளிக் செய்யவும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்