#BREAKING: துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா!

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு.

துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதிய வகை கொரோனாவா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment