புத்தாண்டு நெருங்குவதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார்..!

இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக 17 தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment