#BREAKING: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது!

தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.

தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த தாமோதர ராகேஷின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை ORR சுங்கச்சாவடியில் காவல்துறை கைது செய்த நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் நடந்த வன்முறையில் தாமோதர ராகேஷி என்ற இளைஞர் உயிரிழந்தார், இவரது இறுதி சங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment