#BREAKING: ஏப்..,16-ஆம் தேதி ஆஜராக மு.க ஸ்டாலினுக்கு உத்தரவு..!

2 அவதூறு வழக்குகளில் ஏப்ரல் 16-ஆம் தேதி ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி திமுக தலைவர் ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த மாதம்  16-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
murugan