#BREAKING : தமிழக டிஜிபியாக பதவியேற்றார் சைலேந்திரபாபு…!

தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு  பதவியேற்றுள்ளார்.

தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் பதவியேற்றுள்ளார். இவர் சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி, புதிய டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.