இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 32,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,51,09,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,876 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,48,67,80,227 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 91,25,099 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது.அதில் 995 பேர் குணமடைந்துள்ளனர்.1635 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 797,டெல்லியில் – 465,கேரளாவில் – 234,தமிழகத்தில் – 121 ஆக பதிவாகியுள்ளது.