#Breaking:சற்று முன்…இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு ரூ.25,000 அபராதம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும்,மேலும்,ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி தான் மனு அனுப்பிய நிலையில்,இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும்,எனவே,தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட மனு தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேலும்,விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறி,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப்புக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

30 mins ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

2 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

3 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

3 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

3 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

3 hours ago