#BREAKING : புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் – தடை கோரி முறையீடு

புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. 

ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று வழக்கறிஞர் ஸ்டீபன் என்பவர் தரப்பிலும் ஒரு முறையீடு செய்யப்பட்டது.

இதனையாடுத்து வழக்கறிஞர் வைத்தியநாதன் மற்றும் வரதசக்கரவர்த்தி ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.