Breaking : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பின் பின் பேசிய பிரதமர் மோடி, ‘குறுகிய காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் இந்த தடுப்பூசியை கண்டறிந்ததை கண்டு ஆச்சரியப்படுவதற்காக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியான அனைவரும், தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். பலரும் நரேந்திர மோடி ஏன் தடுப்பூசி போடவில்லை என விமர்சனங்களை முன் வைத்த நிலையில், இந்த விமர்சங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.