#Breaking:சற்று முன்…கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த அனுமதி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

தமிழகத்தில் கோயில்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,கோயில் விழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது,கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம்.ஆனால்,ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து,இதுதொடர்பான மனுக்களை நேற்று தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில்,மதுரை முதலைக்குளம் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. அதன்படி,கோயில் திருவிழாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுரையை சேர்ந்த கருப்பு என்பவரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நாடகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment