#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது.

திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மங்களூரில் தங்கியிருந்த தனியார் விடுதியில் வைத்து கல்குவாரி உரிமையார் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சமீபத்தில் நிகழ்ந்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர். கல்குவாரி விபத்தில் சிக்கி உள்ள மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment