#BREAKING: தமிழக காவலர்களுக்கு உள்துறை அமைச்சக விருது!

சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய 151 போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 15 பேர் சி.பி.ஐ, 11 பேர் மகாராஷ்டிரா காவல்துறை, தலா 10 பேர் எம்பி காவல்துறை மற்றும் உ.பி காவல்துறை, தலா 8 பேர் கேரள காவல்துறை, ராஜஸ்தான் காவல்துறை, மேற்கு வங்க காவல்துறையை சேர்ந்தவர்கள்.  மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 28 பெண் போலீசார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment