#BREAKING : காங்கிரசில் மார்ச் 6,7-ல் நேர்காணல்..!

காங்கிரஸ் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் வருகின்ற 6, 7-ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வருகின்ற 6, மற்றும் 7-ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் சார்பில்  தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை நடத்தி வருகிறது.

author avatar
murugan