#BREAKING: நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகை ரூ.32.30 லட்சத்தை ஆக.7-ல் செலுத்திவிட்டோம் என்று விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு சொகுசு கார் விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது, தனி நீதிபதி சுப்பிரமணியம், வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது பங்களிப்புதானே தவிர தானாக வழங்கும் நன்கொடை அல்ல.

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது உள்ளிட்ட எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தன்னை பற்றி தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்