#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை!

தமிழகம் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிவிப்பு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

இதுபோன்று, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நகை, திருவாரூர் மற்றும் தஞ்சையிலும் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலது சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்