#Breaking : தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர்!

தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது நாட்டு மக்களிடம் காணொலி காட்சி மூலமாக உரையாற்றி வருகிறார். அதில் பேசிய பிரதமர், தீபாவளி வரை நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal