#BREAKING: டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.

இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திர சேகரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில், டிடிவி தினகரனை விசாரிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தினகரன், சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தர சுகேஷ் சந்திரசேகருக்கு ரூ.10 கோடி லஞ்சம் தந்தாக புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்