#breaking: அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சட்ட பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே, பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு பற்றி இன்றே விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மனு தாக்கல் செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்