நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு (அதாவது மே 31 ஆம் தேதி வரை ) நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.