#Breaking: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 190 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 190 பேரும் 19 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் டெல்லி மாநாட்டில் இருந்து தமிழகம் வந்த 1103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதி பெற்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என கூறினார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்