#Breaking : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து…!

கொரோனா அறிகுறி காரணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், பரப்புரை மேற்கொள்வதற்காக, நாளை தமிழக வருவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்கா காந்தி கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தற்போது இவருக்கு கொரோனா அறிக்குறி இருப்பதால், வீட்டில்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.