#BREAKING: எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார். இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 1-3ம் வகுப்பு மாணவர்கள் எளிய முறையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் நேரடியாக கற்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

கற்பிப்பததில் புதிய யுக்தி தேவை என்பதால் தான் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 2025க்குள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை பெற வேண்டும் என்பதே நோக்கம். தொடக்க பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு எண்ணும் எழுத்தும் தோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனி தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள். கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்கும் வங்கியில் இத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி என்பது திராவிட மாடலின் நோக்கமாக இருக்கிறது. தொடந்து இந்த திட்டம் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் பயிற்சி அளிக்கும்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் உரையாற்றினார். இந்த திட்டம் தொடங்கும்போது உள்ள அக்கறையும், ஆர்வமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment