#BREAKING : செஸ் ஒலிம்பியாட் – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருந்த 900 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment