#BREAKING : அரசியலுக்கு வரலாமா..? வேண்டாமா..? என ஆலோசிக்கவுள்ளேன் – ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்கவுள்ளார்.  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் கேள்வி உள்ளதால் அது பற்றி ஆலோசனை மேற்கொள்வதாகவும், மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் பணிகள் என்ன? என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.