#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று நான்காவது நாளாக தொடங்கியது.

அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்களுடன் ராகுல் காந்தி பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்