#BREAKING: ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் குருத்வாராவில் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும், 3 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருத்வாரா இப்போது பயங்கரவாதிகளின் வசம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குருத்வாராவில் ஏராளமானோர் சிக்கி இருப்பதாகவும், சுமார் 25 முதல் 30 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment