இந்த துறையில் 235 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

நீர்வளத்துறையில் 235 உதவி பொறியாளர் பணியிட மாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில், அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, பணியிட மாற்றம், புதிய அதிகாரிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இம்மாதம் தொடக்கத்தில் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் நீர்வளத் துறையில் 235 உதவி பொறியாளர் பணியிட மாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment