#BREAKING : இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும்- தேர்தல் ஆணையர் அறிவிப்பு

  • ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
  • இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்று   மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதற்குஇடையில்  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும். நாளைவரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.