#BREAKING: தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காபூலில் மீண்டும் ஐஎஸ்ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தியிருந்த நிலையில், தற்போது, மீணடும் காபூல் விமான நிலையத்திற்கு அருகே குவாஜா புக்ரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ராக்கெட் செலுத்தி தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்