#Breaking:அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் – திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:பெருங்குடியில் அமேசான் நிறுவனத்திற்கான மிகப்பெரிய  அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4-வது அலுவலகமான இதில், 6000 பேர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த 4-வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில்,அமேசான் நிறுவன அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.