#BREAKING: இதற்கு அடையாள அட்டை தர அதிமுக முடிவு!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு இல்லை என தகவல்.

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும், சிறப்பு அழைப்பாளர்களுக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment