#Breaking: கொரோனாவால் இந்தியாவில் 5 ஆவது மரணம்.!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த 69 வயது முதியவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலியை சேர்ந்தவர் இந்தியாவில் உயிரிழந்தார். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்