#BREAKING: மாவட்ட பதிவாளர் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் – அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!

சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம்.

சென்னை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், மெத்தனமாக பணி செய்த பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நொளம்பூர் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

இதுபோன்று, சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், தகவல் பதிவாளர், உதவியாளர் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார். அலுவலகத்தில் அமைச்சர் நடத்திய திடீர் ஆய்வில் ஆவணங்களை சரிவர பராமரிக்காதது போன்றவை தெரிய வந்ததால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment