#Breaking : தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம் செய்து உத்தரவு. 

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்
  • அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்
  • கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்
  • புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்
  • நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்
  • காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்
  • செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்
  • மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்
  • சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்
  • ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்
  • தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்
  • திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்
  • ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
  • திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்
  • நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்
  • கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்
ias
ias Imagesource Twitter
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.