ஸ்டாலினை பதவி விலக சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை – டிடிவி தினகரன்

ஸ்டாலினை பதவி விலக சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை – டிடிவி தினகரன்

ttv dinakaran

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக சொல்ல ஈபிஎஸ்-க்கு அருகதை இல்லை என டிடிவி தினகரன் பேட்டி. 

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ்-சும் நானும் நீண்ட கால நண்பர்கள். இன்றைக்கு நானும் எனது நண்பர் ஓபிஎஸ்-ம் இணைந்து விட்டோம். அம்மாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் விடமாட்டோம்.

மேலும், அவர் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக சொல்ல ஈபிஎஸ்-க்கு அருகதை இல்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதவி விலகியிருந்தால் இன்று முதல்வரை பதவிவிலக ஈபிஎஸ் கோரலாம். காவல்துறையின் மெத்தனப் போக்கால் விஷச்சாராய விவகாரத்தில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போதை கலாசாரத்தால் மாணவர்கள் சீரழிவதை தடுக்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube