#BREAKING: 10% இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது! – ஜெயக்குமார்

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், அக்கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவித்திருந்தது.

சட்டசபையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளில், இந்த இடஒதுக்கீடு குறித்து, அதிமுக தரப்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை. இந்த நிலையில், 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் என்ற திமுகவின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தான்தோன்றித்தனமாக வாதிட்டு மூக்கறுபட்டு தீர்ப்பு வந்தபின் தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பாஜக தேவையில்லை என்பதால் 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்ப்பதுபோல் திமுக நடிக்கிறது என்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நாளை முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

10 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

11 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

47 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago