#Breaking:பங்குச்சந்தை சென்செக்ஸ் கடுமையான சரிவு!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.அதன்படி,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 14,439 புள்ளிகளும்,நிஃப்டி 405 புள்ளிகளும் சரிந்துள்ளன.

உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டலும் கூட பெரும்பாலான நேரங்களில் சரிவை மட்டுமே பங்குச்சந்தைகள் சந்திக்கும் நிலை உள்ளது.

அந்த வகையில்,வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதைபோல்,நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 15,839 புள்ளிகளில் வர்த்த்கமாகிறது.