கொரோனாவால் ஏற்பட்ட அவலநிலை.! புதைக்க இடமின்றி தவிக்கும் பிரேசில்.!

பிரேசில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரகணணோர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தேடும் அவல நிலை உருவாகியுள்ளது.

பிரேசில் நாட்டில் சாவோ பாலோவின் நகராட்சி  பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி, அந்த கல்லறையில் கிடைக்கும் இறந்தவர்களின் பொருட்களை (எலும்பு உள்ளிட்டவை) வேறு பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.