வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் – துரைமுருகன்

வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவரும் ,திமுக சட்ட மன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேசினார்.

அவர் பேசுகையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதிமுக அமைச்சர் மற்றும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது ஆபத்தானது என்பதை அரசு உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.