ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு; 65 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.

author avatar
Rebekal