136 பயணிகளுடன் ஆற்றுக்குள் சென்ற விமானம் !

அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது.

போயிங் 737 ரக விமானம் கியூபாவின் குவாண்டனமோ என்ற விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே விமான நிலையத்துக்கு வந்தது.இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது . விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தை  தாண்டி விமானம்  வேகமாகச் சென்று விமானம் அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது.ஆனால் இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Leave a Comment