பொள்ளாச்சி அருகே மதுவிருந்து ! ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது

பொள்ளாச்சி அருகே மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் கணேஷ் என்பவரின் தோட்டத்தில் போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து புகாரின் பெயரில்  கோவை எஸ்.பி. சுஜித் குமார் தலைமையிலான காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.மதுவிருந்தில் போதை மருந்து பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக 159 கேரள மாணவர்கள் கைது செய்தது காவல்த்துறை.மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்த்துறை.

Leave a Comment