சபாநாயகரின் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூர்க்கிலிருந்து சென்னை புறப்பட்டதாகவும தெரியவில்லை என்பதால் அவர்கள் சபாநாயகருக்கு விளக்கம் அளிப்பது சந்தேகம் என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமைச்சர்களுடன் காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.